tamilnadu

img

நரேந்திர மோடி பதவியேற்றார் அமித் ஷாவையும் அமைச்சராக்கினார்

புதுதில்லி,மே 30-குடியரசுத் தலைவர் மாளிகையில் மே 30 வியாழனன்று மாலை நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியா வின் பிரதமராக பதவியேற்றார்.சமீபத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303இடங்களில் வென்றது. நாடாளு மன்ற பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு, பிரதமராக பதவி ஏற்குமாறு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். இதனைத்தொடர்ந்து தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முற்றத்தில் மே 30 வியாழ னன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். விழாவில் மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிபிரமாணமும், ரகசிய காப்பு பிரமாண மும் செய்து வைத்தார். இதன்மூலம் மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களும் பதவியேற்ற னர்.  மோடியை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் அமைச்சராக பதவியேற்றார். அதனையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவரையடுத்து நிதின்கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிமரத் கௌர், தாவர்ச்சந்த் கெலாட், எஸ்.ஜெய்சங்கர்,  ஸ்மிருதி இரானி, ஹர்ஷவர்த்தன்,பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, சந்தோஷ் கங்க்வார், கிரிராஜ் சிங், அரவிந்த் சவாந்த், கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தர்ஜித் சிங், ஸ்ரீபத் யசோ நாயக், ஜிதேந்திர சிங், கிரண்ரிஜூஜூ, ராஜ்குமார் சிங்,பிரகலாத் படேல், பக்கன் சிங், வி.கே.சிங் ஆகி யோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.பதவியேற்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோ கன் சிங், தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக முத லமைச்சர் குமாரசாமி, பீகார் முதல்வர்நிதிஷ் குமார், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட தலைவர்கள்  கலந்து கொண்டனர். மோடியின் அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளான வங்காள தேசத்தின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.