tamilnadu

img

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு... 3 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்

திருநெல்வேலி:
நாங்குநேரி அருகே 2 பெண்கள் கொலை வழக்கில், 3 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளமறுகால்குறிச்சியில் காதல் திருமணத்தால் ஏற்பட்டமுன்விரோதம் காரணமாக பழிக்கு பழியாக கொலைசம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 26-ந்தேதி சண்முகத்தாய் ,சாந்தி ஆகியஇரண்டு பெண்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுகழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர், இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவரும்நிலையில் தாய்-மகள் கொலை வழக்கு தொடர்பாக மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து, மற்றும் கண்ணன் ஆகிய 3 பேர் திருச்சி .எம். எண் 1 நீதிமன்றத்தில்
வியாழனன்று சரண் அடைந்தனர். இவர்களை 15 நாள்நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.