புதுதில்லி, ஜூன் 2- அரபிக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி நிஜாரா புயலாக தீவிரமடைந்துள்ளது. இது மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படு கிறது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ராய்காட், பால்கரில் தலா இரண்டு, தானே மற்றும் நவி மும்பையில் தலா ஒரு குழு வினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பாதித்துள்ள மாநி லங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள் ளது. இந்த நிலையில் மும்பை மற்றொரு பேரழிவை சந்திக்க உள்ளது. செவ்வாய் பிற்பகல் நான்கு மணி நிலவரப்படி நிஜாரா புயல் வடக்கு - வடகிழக்கு நோக்கி நகரும். இதனால் ஜூன் 3-ஆம் தேதி பிற்பகல் 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும். புயல் புத னன்று பிற்பகல் ஹரிஹரேஷ்வர் மற்றும் தமன் இடையே வடக்கு மகாராஷ்டிரா- தெற்கு குஜ ராத் கடற்கரைகளை கடக்கிறது.
இந்த நிலையில், கொரோனாவுடன் போராடிவரும் நாங்கள் சூறாவளியையும் சமாளிக்க தயாராக உள்ளோம் என்று மகா ராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இருந்து 577 மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் சென்றிருந்தன. திங்கள் மாலை வரை 477 பேர் திரும்பிவிட்டதாக ஆட்சியர் கைலாஸ் ஷிண்டே தெரிவித்துள்ளார். 100 பேரை கரைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குஜராத்
நிஜாரா புயல் உருவாகியுள்ள நிலை யில் குஜராத் கடற்கரைக்கு அருகிலுள்ள கிரா மங்களைச் சேர்ந்த 20,000 பேர் வெளி யேற்றப்பட்டுவருகின்றனர். 35 கடலோர கிராமங்களில் உள்ள சுமார் 10,000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக வல்சாத் மாவட்ட ஆட்சியர் ஆர்.ஆர்.ராவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் முப்பத்து மூன்று தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி) எஸ். என். பிரதான் கூறுகையில், “குஜராத்தில் 11 குழுக்கள், மகாராஷ்டிராவில் 10 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
கேரளம்
இதற்கிடையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், கேரளாவில் திரு வனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கொல்லம், பந்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.