நல்ல உணவு, கவச உடை, பூட்ஸூக்களை கூட வழங்குவது இல்லை...!
சிஏஜி அறிக்கையில் தகவல்
புதுதில்லி, பிப்.5- மோடி 2014-ஆம் ஆண்டு பிரத மராகப் பொறுப்பேற்ற பின் வந்த முதல் தீபாவளியை சியாச்சின் மலை உச்சியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அவர்களுக்கு இனிப்பு கொடுத்தார், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். உலகிலேயே மிக கடுமையான குளிர் நிலவும் பிரதேசமான சியாச்சின் ராணுவ முகாமிற்கு, இதற்கு முன்பு வேறெந்த பிரதமராவது சென்றிருக்கிறார்களா.. ராணுவ வீரர்கள் மீது எவ்வளவு அன்பும், மதிப்பும் இருந்தால் இவ்வளவு கஷ்ட மான இடத்திற்கு ஒரு பிரதமர் செல்வார்.. என்றெல்லாம் பாஜகவினர் தம்பட்டம் அடித்தனர். சில நாட்களுக்கு முன்புகூட என்சிசி மாணவர்களின் பரேடில் பேசிய மோடி, “முந்தைய ஆட்சியாளர்கள் ராணு வத்தின் முடிவுகளில் தலையிட்டனர். இந்த ஆட்சியில் ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் உள்ளது. நம் ராணு வத்துக்கு உத்தரவிட்டால் பத்து நாட்க ளில் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைப்பார்கள்” என்று பேசி உசுப்பேற்றி னார்.
இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் ராணுவத்தை கண்டுகொள்ளவில்லை; புதிய தலைமுறை போர்விமானங்கள் ஒன்றுகூட இல்லை; ஆனால், தற்போது ரபேல் ரக புதிய தலைமுறை விமா னங்களை வாங்கிக் குவித்துள்ளோம் என்றெல்லாம் குடியரசு தின விழா வின்போது அமைச்சர்கள் அடுக்கினர். இந்நிலையில்தான், மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதி காரி(The Comptroller and Auditor General of India -CAG) தனது வருடாந்திர அறிக்கையை பிப்ரவரி 3 அன்று நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதில், ராணுவத்தினரின்- குறிப்பாக கடுங்குளிர் சிலவும் சியாச்சின் மலைச் சிகரத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் பெரும் அவலத்தையும் துயரத்தையும் சந்தித்து வருவதாக கூறியுள்ளார். சியாச்சின், லடாக், டோக்லாம் மலைச் சிகரங்களானது பாகிஸ்தான், சீன எல்லைகளைக் கண்காணிக்கும் முக்கிய இடமாகும். -55 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும், இந்த பிரதேசத்தில் இந்திய ராணுவ வீரர்களின் பணி மிக முக்கிய மானது.
அவ்வாறு இருக்கையில், சியாச்சின், லடாக் மற்றும் டோக்லாம் போன்ற பகுதி களுக்கு அனுப்பப்படும் ராணுவத்தின ருக்குத் தேவையான பனிக் கண்ணாடி கள், பல்நோக்கு பூட்ஸ் மற்றும் கடுங் குளிரை சமாளிப்பதற்குத் தேவையான உணவு, உறைபனித் தடுப்பு கவச உடை கள் மற்றும் உபகரணங்கள் (HACE) வழங் கப்படுவதில்லை என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளார்.
“நவம்பர் 2015 மற்றும் செப்டம்பர் 2016க்கு இடையில், கடுங்குளிரில் ராணு வத்தினரின் கால்களைப் பாது காக்கக்கூடிய பல்நோக்கு பூட்ஸிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மறுசுழற்சி செய்யப்பட்ட பூட்ஸைத் தேர்வு செய்யு மாறு கட்டாயப்படுத்தப்படுகிறது. சியாச் சின் பனிப் பிரதேசத்தில் முகாமிட்டி ருக்கும் ராணுவ வீரர்களுக்கு அவசிய மான உபகரணமான 750 பனிக் கண்ணாடி கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. நீண்ட உடைகளும் கிடைப்பதில்லை. இந்த உபகரணங்கள் கொள்முதலில் பெரிய அளவிற்கு தாமதம் ஏற்படுகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “சியாச்சின், லடாக், டோக்லாம் போன்ற உயரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படையினருக்கு தேவையான கலோரி கள் (சத்துணவு) கிடைப்பதில்லை” என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள் ளது. எதற்கெடுத்தாலும் ராணுவத்தைக் கூறி ஜம்பம் அடித்துவரும் மத்திய பாஜக அரசு, கடும் குளிரில் பணியாற்றும் அவர்களுக்கு சத்தான உணவு, கவச உடை மற்றும் பூட்ஸூக்களைக் கூட வழங்காமல் சித்ரவதை செய்து வரு வது சிஏஜி அறிக்கை மூலமாக அம்பல மாகியுள்ளது.