நடப்பு நிதியாண்டில் ரூ.1 2 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துஉள்ளது. இதில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான- நிதியாண்டின் முதல் பாதிக்குள் ரூ. 7 லட்சத்து 66 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி விட்டது. இந்நிலையில்,கொரோனா தொடர்பான செலவினங்களுக்காக, மீதி உள்ள 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ. 4 லட்சத்து 34 ஆயிரம் கோடியை வெளிநாடுகளில் கடன் வாங்க உள்ளது. இத்தகவலை மத்திய அரசின் பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.