tamilnadu

img

நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனச் செலவைக் குறைத்த மோடி அரசு.... கடந்த ஆண்டைக் காட்டிலும் 55 சதவிகிதம் குறைவு

புதுதில்லி:
நிதிப் பற்றாக்குறையை சரிக்கட்டுகிறோம் என்ற பெயரில், வளர்ச்சி திட்டங்களுக்கான செலவை மோடி அரசு குறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மொத்த பட்ஜெட் இலக்கில்40 சதவிகிதம் மட்டுமே செலவிடப் பட்டுள்ளது. அதாவது, முழு நிதியாண்டுக்குமான செலவு இலக்கில் 40 சதவிகிதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்செலவிடப்பட்ட தொகையைக் காட்டிலும் 55.5 சதவிகிதம் குறைவாகும். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், நாட்டுமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் ரூ. 21 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக மோடி அரசுகூறியது. ஆனால், அப்படி செலவிட்டதாக கூறியும், அது பட்ஜெட் இலக்கில்பாதியைக் கூட எட்டவில்லை. 

அதாவது வளர்ச்சிக்கான செலவுகள் எனப்படும் மூலதனச் செலவுகளைத்தான் மோடி அரசு குறைத்துள்ளது. இவ்வாறு சுருக்கப்பட்ட செலவினங்கள் பெரும்பாலும், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டியவை என்று கூறப்படுகிறது. மேலும், செலவினக் குறைப்பு மூலம், நிலக்கரி, மின்சாரம், கப்பல் மற்றும் எஃகு போன்ற முக்கியமான துறைகளும் தங்கள் ஆண்டு பட்ஜெட்ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே மூலதனத்தை பெற உள்ளன.இந்நிலையில், ஆனால், இவ்வாறுமூலதனச் செலவுகளை, மத்திய அரசுநிராகரிக்க முடியாது எனவும், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த செலவுகளை கட்டாயமாக மேற்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.“மூலதனச் செலவு என்பது அரசாங்கம் புறக்கணிக்கக் கூடாத ஒன்று” என புதுதில்லியில் உள்ள தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவர் சபியாசாச்சி கார் கூறியுள்ளார். மேலும், “வருவாய் குறைவாகவே இருக்கிறதே என்று நினைத்து, செலவுகளைக் குறைத் தால், அது நாட்டின் வளர்ச்சியையும் குறைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.