tamilnadu

img

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மன்மோகன் சிங்...

தில்லி 
நாட்டின் முன்னாள் பிரதமரும், பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக ஞாயிறன்று இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதீஷ் நாயக் தலைமையிலான குழுவினர் மன்மோகன் சிங்கிற்கு தீவிர சிகிச்சையளித்தனர். நெஞ்சுவலிக்கு அளிக்கப்பட்ட மருந்து திடீரென அவருக்கு நல்ல பலனை அளித்தாலும், நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. திடீர் காய்ச்சலால் மன்மோகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வெளியாக இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

;