tamilnadu

img

கனவுகளை விதைத்த காந்தக் குரலோன்.... எஸ்.பி.பி-க்கு யெச்சூரி இரங்கல்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது காந்தக் குரலால் நம் உள்ளங்களுக்குள் எண்ணற்ற கனவுகளையும் உணர்வலைகளையும் கொண்டு வந்து சேர்த்த ஒரு மகத்தான பாடகர். அவரது அசாத்தியமான திறமை, அவருக்கு மிகப்பெரும் புகழை தேடித் தந்தது. நம் எல்லோராலும் அவர் என்றென்றும் நினைவில் நிறுத்தப்படுவார்; கோடானுகோடி மக்களை மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் ஆழ்த்திய அவரது குரலும் அவரது உணர்வுப்பூர்வமான பங்களிப்பும் என்றென்றும் அவரை நினைவில் நிறுத்தியிருக்கும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

;