tamilnadu

img

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம்

ஆறு கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு

ஸ்ரீநகர், ஆக.22- ஜம்மு - காஷ்மீர் மாநி லத்தின் தன்னாட்சி அந்தஸ்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடு வோம் என ஜம்மு-காஷ்மீர் மாநில 6 கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜம்மு - காஷ்மீர் மாநில மாநாட் டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அவானி தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய 6 கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமையன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம்தேதி நிறைவேற்றப்பட்ட குப்ஹார் பிரகடனத்தின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தன் னாட்சி உரிமையை பாதுகாக்க இணைந்து போராடுவோம் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாச னத்தின் பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை பாதுகாக்க ஒன்று பட்டு போராடுவோம். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுப் போம். ஜம்மு - காஷ்மீர் மாநி லத்தை துண்டாடி அரசியல் சாச னத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்தது என்பது முற்றிலும் எதேச்சதிகார நடவடிக்கையாகும். இதனால் புதுதில்லிக்கும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கும் இடையே பெருமளவு இடைவெளி ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண் டாக மாநில மக்கள் பெரும் துய ரங்களை அனுபவித்து வருகின்ற னர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த மாநிலம் துண்டாடப்பட்டது ஒரு பெரும் துயர நிகழ்வாகும். கடந்த ஓராண்டாக மக்களின் வாயை அடைக்க கடும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. அர சியல் கட்சிகளின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் மாண்புகளை பாது காக்க உறுதியுடன் ஒன்றுபட்டு போராடுவோம் என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.  கூட்டறிக்கையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, காங்கி ரஸ் தலைவர் ஜி.ஏ.மிர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் தாரிகாமி மற்றும் சஜத் ஞானி லோன், முசாபர் ஷா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.