tamilnadu

img

உத்தரகாண்டில் நிலச்சரிவு... 6 பேர் பலி 

டேராடூன்
இமயமலை சாரலில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சில இடங்களில் லேசான அளவில் வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பித்தோரகர் மாவட்டத்தின் தங்கா எனும் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 15-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கி கொண்டனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையின் தீவிர தேடுதல் பணிக்கு பிறகு இதுவரை 6 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

மேலும் 11 பேரை காணவில்லை என்பதால் அஸ்கோட் மற்றும் அல்மோரா ஆகிய இடங்களில் 3 குழுக்களாக பிரிந்து மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.