tamilnadu

img

பொதுக் கல்வித் துறையில் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளம்... பள்ளிகளின் மாற்றம் நாட்டின் சாதனை... முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்

திருவனந்தபுரம்:
நல்ல வசதிகள் கொண்ட பள்ளிகளில் படிப்பது என்பது சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில் இருந்து, ஏழைகளுக்கும் நல்ல வசதிகள் நிறைந்தபள்ளிகளில் படிப்பதை சாத்தியமாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பொதுக் கல்வித் துறையில் கேரளாமுதல் முழுமையான டிஜிட்டல் மாநிலமாக மாறியுள்ளது என்று அறிவித்த பின்னர் முதல்வர் பேசியதாவது: ஒன்றுமுதல் பன்னிரண்டு வகுப்புகளுக்கு 3,74,270 உயர் தொழில்நுட்பஉபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எட்டு முதல் பிளஸ் 2 வரையிலான45,000 உயர் தொழில்நுட்ப வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும்  நாங்களே செய்தோம் என்று இதுவரை கூறவில்லை. சிலவற்றை மற்றவர்கள் செய்திருக்கலாம். இந்த அரசாங்கத்தால் அதை நிறைவு செய்ய முடிந்தது. இது நாட்டின்சாதனையாக பார்க்கப்பட வேண்டும். சாதனைகளை மறைக்கும் எந்த முயற்சியும் தேவையற்றது என்றும் முதல்வர் கூறினார்.பொதுக் கல்வியை மேம்படுத்துவதில் மக்கள் பங்கேற்பை அரசாங்கம்உறுதி செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த திட்டத்தின்உண்மையான தலைமை வழங்கப்பட்டது. இதன் விளைவாக, மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மற்ற பள்ளிகளைப் போலவே, அரசுப் பள்ளியும் மாறி விட்டது. கேரளாவில் பொதுக் கல்வியை வலுப்படுத்துவது ஏற்கனவே நாட்டினாலும் உலகத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த பள்ளியின் வசதிகள் கேரளாவில் உள்ளன. இது கல்வி மட்ட அளவிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் சுட்டிக்காட்டினார்.1.19 லட்சம் மடிக்கணினிகள் மற்றும் 69,944 ப்ரொஜெக்டர்கள் உட்பட மொத்தமாக கொள்முதல் செய்தது எதிர்பார்த்ததைவிட விலைகுறைந்தது. அனைத்து உபகரணங்களும் ஐந்து ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, 4752 அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 வரை 45,000 வகுப்பறைகள் உயர் தொழில்நுட்பமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 11,275 எல்பிக்கள் உ.பி. பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைக்கப்பட்டன. 12678 பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.