tamilnadu

img

இந்தியா முன்மாதிரியாக செயல்படும் கேரள ஐசிடிஎஸ்... கே.கே.ஷைலஜா பெருமிதம்

திருவனந்தபுரம்:
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மாநிலபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஆன் லைனில் ஏற்பாடு செய்துள்ள மாநில அளவிலான 45 நாள் நிகழ்ச்சியை அமைச்சர் கே.கே.சைலஜா தொடங்கி வைத்தார். பிரச்சாரம் தொடர்பான இலச் சினை (லோகோ) மற்றும் நோக்கப் (தீம்) பாடலை அமைச்சர் வெளியிட்டார்.

1975 ஆம் ஆண்டில் கேரத்தில்உள்ள வேங்கராவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பல கட்டங்களாகவளர்ந்து, இன்று 258 ஐசிடிஎஸ்திட்டங்களின் கீழ் 33,115 அங்கன்வாடிகள் மூலம் சேவை செய்கிறது. இத்திட்டம் பயனாளிகளிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து சமூகத்திற்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் 45 நாட்கள் நடத் தும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த மற்றும் முன்மாதிரியான ஐசிடிஎஸ் அமைப்புஉள்ளது என்று அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் தெரிவித்தார். அங்கன்வாடிகளை மேம்படுத்த இடது ஜனநாயக முன்னணி அரசு இணையற்ற தலையீடுகளை செய்துள்ளது. சமூக நீதித்துறைமற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலையீடு காரணமாக, அங்கன்வாடிகளின் தோற்றமும் செயல்பாடும் வெகுவாக மாறிவிட்டன. இந்த அரசாங்கமும் மிகச்சிறந்த பணிகளைச் செய்து வருகிறது.

இன்று இவை சீர்மிகு (ஸ்மார்ட்) அங்கன்வாடிகளாக மாறி வருகின்றன. இவற்றின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, அங்கன்வாடிகள் பயனாளிகளுக்கு வழங்கும் சேவைகளை உறுதி செய்வதிலும், செயல்திறனை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் கூறினார். அங்கன் வாடி சேவைகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி சிறந்தசேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வு, நோய்த் தடுப்பு மருந்து, உள்ளாட்சி திட்டமிடல் மற்றும் கோவிட் தடுப்புத்துறையில் துறை ஊழியர்கள் சிறந்த சேவையைச் செய்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.  ஐ.சி.டி.எஸ் பயனாளிகள் மற்றும்அவர்களது குடும்பங்களுடன் அமைச்சர் ஆன்லைனில் உரையாடினார். கோவிட் காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட அங்கன்வாடி தொழிலாளர்களின் அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண் டார்.விழாவிற்கு சமூக நீதித்துறைசெயலாளர் பிஜு பிரபாகர் தலைமை தாங்கினார். அனுபமா வரவேற்றார். கூடுதல் இயக்குநர் பிந்து கோபிநாத், ஜோ. இயக்குனர் எஸ்.என். சிவன்யா, திட்டஅதிகாரிகள், சிடிபிஓக்கள்,ஐசிடிஎஸ் மேற்பார்வையாளர் கள் மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

45 நாட்களில் 15 நிகழ்ச்சிகள்
ஐ.சி.டி.எஸ்ஸின் 45 வது ஆண்டில், 45 நாட்களில் சுமார் 15 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அங்கன் வாடிகளிலும் தொழிலாளர்கள் குத்து விளக்கேற்றுவர். கலாச் சார மற்றும் விளையாட்டு ஆளுமைகளின் குறித்த செய்திகளைக் கொண்ட நிகழ்ச்சிகள் நடத்தப் படும். அங்கன்வாடி என்பது படைப்பாற்றல், ஆன்லைன் கட்டுரை போட்டி மற்றும் சமூக மாற் றத்திற்கான ஒரு தளமாகும். அங்கன்வாடி தொழிலாளர்கள் உள்நாட்டில் கிடைக்கும் மற்றும் மலிவான பொருட்களைப் பயன் படுத்தி கற்றல் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களின்வீடியோவை உருவாக்குகிறார் கள்.