tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்காக வீட்டை தானமாக கொடுத்த கேரள டாக்டர் 

திருச்சூர் 
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸை சமாளிக்க கேரளா அரசு நவீன முறையில் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களும் தங்களால் இயன்ற வரையில் கேரள அரசுக்கு ஒத்துழைப்பும், உதவியும் செய்து வருகின்றனர்.      

இந்நிலையில், கேரளா மாநிலத்தின் முக்கிய மாவட்டமான திருச்சூரின் தேசமங்கலம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் சோகன் ராய் என்பவர் தனது வீட்டை கொரோனா வைரஸ் தனிமை வார்டுக்காக கொடுத்துள்ளார். அரபு அமீரகத்தை தலையிடமாக கொண்டுள்ள ஏரீஸ் குழுமத்தின் தலைமை அதிகாரியான இந்த  சோகன் ராய் கேரளத்தின் பத்து மாவட்டங்களுக்கு தலா ஒரு சுவாசக்கருவி வழங்குவதாகவும், 2,000 குடும்பங்களுக்கு தங்களது நிறுவன ஊழியர்கள் மூலம் உதவிகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

;