tamilnadu

img

கேரள பாஜக மீடியா செல் ஒருங்கிணைப்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்.... வகுப்புவாத அரசியலிலிருந்து விடைபெறும் நிர்வாகிகள்

திருவனந்தபுரம்:
கேரள யுவ மோர்ச்சா மாநிலத் தலைவரும், திருவனந்தபுரம் பாஜக ஊடக செல் ஒருங்கிணைப்பாளருமான வலியசாலா பிரவீன் சங் பரிவார் உறவைத்துறந்து மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். வகுப்பு வாதம் நாட்டிற்கு ஆபத்து என்பதை உணர்ந்ததால் இனிமேல் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று பிரவீன் கூறினார். சிபிஎம் திருவனந்தபுரம்மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பன், வி சிவன்குட்டிஆகியோர் அவரை வரவேற்றனர்.தலைநகர் மாவட்டத்தில் பாஜக முற்றிலும் சரிந்து வருவதாக ஆனாவூர் கூறினார். அரசியல் ஏமாற்று மற்றும்மதவெறி மூலம் மக்களைப்பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்-பாஜக நிகழ்ச்சி நிரலுக்குஎதிராக சிபிஎம் தலைமையில்வளர்ந்து வரும் மதச்சார்பற்றசமூகத்தின் எதிர்ப்பு பலனளித்து வருகிறது. தலைவர் களும் ஊழியர்களும் கூட அறியாத வகையில் பாஜக அரசியல் நடவடிக்கைகள் உள்ளன. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மேலும் பலர் சரியான நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்று ஆனாவூர்கூறினார்.

ஆனாவூரில் 30 குடும்பங்கள் 

திருவனந்தபுரம் ஆனாவூரில் பாஜக- காங்கிரஸ் உறவை துண்டித்து 30 குடும்பங்கள் சிபிஎம்மில் இணைந்தன. அவர்களுக்கு சிபிஎம் ஆனாவூர் லோக்கல் கமிட்டியின் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்து. வெள்ளரடா பகுதிக்குழு உறுப்பினர் டி.வேலாயுதன் நாயர், லோக்கல் கமிட்டிசெயலாளர் ஆர்.பரமேஸ்வரன் பிள்ளை, பஞ்சாயத்து தலைவர் எச்.எஸ்.அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவல்லாவில் 20 குடும்பங்கள்
திருவல்லாவில் சத்தமலா. காட்டுகரா பகுதிகளில் காங்கிரஸ், பாஜகவுடன் இணைந்து பணியாற்றிய 20 குடும்பங்கள் அந்தக் கட்சிகளுடனான தொடர்பை துண்டித்துவிட்டு சிபிஎம்- இல் இணைந்தன. ஞாயிறன்று சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி. உதயபானு சிவப்பு மாலைகளை அணிவித்து அவர்களை வரவேற்றார்.

சாலக்குடியில் 50 பேர்
அதிரப்பிள்ளி பஞ்சாயத்தில் உள்ள வெற்றிலப் பாறயில் சுமார் 50 பேர் காங்கிரஸ் மற்றும் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்து சிபிஎம்- இல் இணைந்தனர்.  பகுதி குழு உறுப்பினர் கே.எஸ்.அசோகன், பஞ்சாயத்து துணைத் தலைவர் வழக்கறிஞர். பிஜு வசக்கலா, உள்ளூர் செயலாளர்கே.கே.ரிஜேஷ் உள்ளிட் டோர் வரவேற்றனர்.

வயநாடு- திருநெல்லி
வயநாடு மாவட்டம் திருநெல்லி பஞ்சாயத்தில் காங்கிரஸ்- பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிஏராளமானோர் சிபிஎம்மில்இணைந்தனர். பனவல்லியில், பாரம்பரிய காங்கிரஸ்மற்றும் பாஜக குடும்பங்களின் உறுப்பினர்கள் சிபிஎம்மில் இணைந்தனர். இதுபோல் பிலாமூலயில், எட்டு குடும்பங்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்து சிபிஎம் இல் இணைந்தன. மானந்தவாடி பகுதி குழு உறுப்பினர் பி.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட் டோர் அவர்களை வரவேற்றார்.