tamilnadu

img

பாஜகவில் சேர்ந்தால் ஊழல் பேர்வழிகள் உத்தமர் ஆகி விடுவார்களா?

புதுதில்லி:
ஊழல் பேர்வழிகள், பாஜகவில் சேர்ந்தவுடன், புனிதர்களாகி விடுகிறார்களா? என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்கட்சித் தலைவருமான மாயாவதி கேட்டுள்ளார்.

\தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தமாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர்மீது, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களின் வீடுகள், அலுவலங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், அந்த 4 எம்.பி.க்களும் சில நாட்களுக்கு முன்பு, அமித்ஷா முன்னிலையில் திடீரென பாஜகவில் இணைந்தனர்.
இதனைக் குறிப்பிட்டே, மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

“மாநிலங்களவையில், தெலுங்குதேசம் கட்சியின் 6 உறுப்பினர்களில் 4 பேரை இழுத்து, அந்த அவையில், தெலுங்குதேசம் கட்சியின் இருப் பையே இல்லாமல் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ள மாயாவதி, “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அரசின் சார்பில், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நேரத்தில்தான், பாஜக இதுபோன்ற கட்சிஉடைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பாஜக-வில் இணைந்த 4 பேரில், 2 பேரை ஊழல் கறைபடிந்தவர்கள் என்று ஏற்கெனவே விமர்சித்துவந்த கட்சி பாஜக. அவ்வாறிருக்க, தற்போது அந்த இருவரும் பாஜக-வுக்குவந்தவுடன் புனிதர்களாகி விட்டார் களா; ஊழல்கறை படிந்த எம்.பி.க்கள் பாஜக-வில் சேர்ந்துவிட்டால் மட்டும் உத்தமர்கள் ஆகி விடுவார்களா? இதுதான் பாஜக-வின் அரசியல் பாதையா;பாஜக-வினர் செய்தால் தவறு, சரியாகி விடுமா?” என்றும் விளாசித் தள்ளியுள்ளார்.