tamilnadu

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்ட ஜே.என்.யு மாணவர்கள் மீது தடியடி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை தளர்த்த கோரி குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் தேர்வுக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மாணவர்கள் பலகட்ட  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று  கட்டண உயர்வை குறைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க மாணவர்கள் பேரணியாக சென்றுள்ளனர். அப்போது அவர்களை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் காவல்துறையினருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.