இந்துத்துவா பேர்வழிக்கு ஐபிஎஸ் கூட்டமைப்பு கண்டனம்
புதுதில்லி, ஆக. 28 - அண்மையில் வெளியான ‘சிவில் சர்வீஸ் தேர்வு’ முடிவுகளில், முஸ்லிம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாகவும், இது ‘யுபிஎஸ்சி-யில் முஸ்லிம்களின் ஊடுருவல்’ போல தெரிவதாகவும் கூறிய சுரேஷ் சவ்ஹான்கே என்ற இந்துத்துவா ஊடக பேர்வழிக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ‘சுதர்ஷன் டிவி’ என்ற பெய ரில் செய்திச் சேனல் நடத்தி வரு பவர்தான் சுரேஷ் சவ்ஹான்கே. தனது நிறுவனத்தில் வேலைபார்த்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, சங்-பரிவார பேர்வழி என்பதற்கான சர்வ ‘லட்சணத்தை’யும் நிரூபித்துக் காட்டியவர். இவர், தனது வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளி யிட்டிருந்தார். அதில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அதிகளவில் முஸ்லிம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்; இவர்கள் ஆர்சிஏ அகாடமியில் படித்தவர்கள் என்பதைப் பார்க்கையில், இது ‘முஸ்லிம்களின் ஊடுருவலோ’ என (ஜாமியா கே ஜிஹாதி) சந்தேகமாக இருக்கிறது என்று வெறுப்பைக் கொட்டியிருந்தார்.
மேலும், இழிவான தரக்குறைவான வார்த்தைகளையும் பயன் படுத்தியிருந்த அவர், ‘யுபிஎஸ்சி ஜிகாத்’ என்ற ஹேஷ்டேக்-கையும் டுவிட்டரில் பதிவிட்டார். மேலும், தனது இந்த வீடியோவை பிரதமர் மோடிக்கும் அவர் டேக் செய் திருந்தார். ஆனால், வீடியோ தொடர்பாக பிரதமர் மோடியோ, மத்திய அரசோ இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரி வித்துள்ளது. சுதர்ஷன் டிவி-யின் பொறுப்பற்ற மற்றும் வகுப்புவாத தன்மையுடைய ஊடக செயல் பாட்டை நாங்கள் கண்டிக்கிறோம் என்று ஐபிஎஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியை (ஆர்சிஏ) நடத்திவரும் தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகமும் கண்டனத்தைப் பதிவு செய்துள் ளது. தங்களின் ஆர்சிஏ அகாடமி யில் படித்து யுபிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 30 பேரில் 16 பேர் முஸ்லிம்கள் என்றால், 14 பேர் இந்துக்கள் என்று ஜாமியா துணைவேந்தர் நஜ்மா அக்தர் பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள் ளார்.