அயோடின் கரைசல் 15 வினாடிகளில் கொரோனா வைரசை செயலிழக்கச் செய்யும் என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சீனாவின் ஊகான் மாகாணத்தில் முதன் முதலில் தோன்றி கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அயோடின் கரைசலை பயன்படுத்துவது கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கனெக்டிக்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் போவிடோன்- - 0.5%, 1.25% மற்றும் 2.5% என்ற அயோடினின் மூன்று வெவ்வேறு செறிவுகளுக்கு எதிராக வைரஸின் மாதிரிகளை அவர்கள் பரிசோதித்தபோது, 15 விநாடிகளுக்குள் வைரஸை முழுமையாக இவை செயலிழக்கச் செய்ய இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 0.5 அயோடின் செறிவு கூட சார்ஸ் கோவிட்-2 வைரஸை முற்றிலுமாக செயலிழக்கச் செய்யலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.