tamilnadu

img

தில்லியில் நடந்த வன்முறை பேரதிர்ச்சியாக இருக்கிறது!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் பேட்டி

புதுதில்லி, மார்ச் 6 - தில்லியில் சங்-பரிவாரங்கள் வெறியாட்டம் நடத்திய பகுதிகளை, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.கே, பட்நாயக் ஆகியோர் வியாழனன்று நேரில் பார்வையிட்டனர். வன்முறை யால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், “தில்லி வன்முறையே அதிர்ச்சியான சம்பவமாகும்; இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கும்போது பேரதிர்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள் ளார்.

“தில்லியில் பலர் வீட்டை இழந்துள்ளனர். பலர் உடமைகளை, வாகனங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர், இன்னும் பலர் உறவுகளை இழந்துள்ளனர். சிலர் மீட்பு முகாம்களில் இருக்கிறார்கள். முகாம்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் வீட்டிற்கு செல்லவே பயப்படு கின்றனர். இதற்கு உரிய உதவியை சட்ட அமைப்புகள் செய்து தர வேண்டும். வழக்கறிஞர்கள், மூலம் இவர்களுக்கு உதவ வேண்டும். முக்கியமாக பாதிக்கப்பட்டவர் களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வா கங்கள் மற்றும் மாணவர்களை இதற்காக பயன்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.  மேலும், “யார் தவறு செய் தார்கள் என்பதைப் பார்ப்பதற்காக அல்லாமல், நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவே தங்கள் குழு சென்றதாகவும் நீதிபதி குரியன் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.
 

;