tamilnadu

img

தொழில்துறை உற்பத்தி 55 சதவிகிதம் வீழ்ச்சி...

புதுதில்லி:
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 55.5 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுப்பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறை உற்பத்தி முற்றிலும் முடங்கியது. ஏப்ரல் மாத மத்தியில் சில துறைகளில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, உற்பத்தி மீண்டும் தொடங்கியது. எனினும் தொழிலாளர் பற்றாக்குறை கொரோனா பீதி போன்ற காரணங்களால் தொழில் துறை உற்பத்தி மந்தமாகவே உள்ளது.இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி (Industrial production -IIP) குறித்த விவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office -NSO)வெளியிட்டுள்ளது. அதில், தொழில் துறை உற்பத்தியானது ஏப்ரல் மாதத்தில் 55.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து உள்ளதாகவும், குறிப் பாக உற்பத்தித்துறை மிக மோசமாக 64.3 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மட்டுமல்லாமல் மார்ச் மாதத்துக்கான உற்பத்தி மதிப்பீட்டையும் தேசியப் புள்ளியியல் அலுவலகம் தற்போது திருத்தியுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் 16.3 சதவிகித வீழ்ச்சி இருந்த நிலையில் தற்போதைய மதிப்பீட்டில் அதனை 16.7 சதவிகிதம் என்று புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டு உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிப்போனதே தற்போதைய மதிப்பீட்டில் இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்று தலைமைப் புள்ளியியல் நிபுணரான பிரவீன் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.ஏப்ரல் - ஜூன் காலாண்டிலும், இந்தமுழு நிதியாண்டிலும் இந்தியப் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும்என்று புள்ளியியல் துறை மதிப்பிட் டுள்ளது.அண்மையில் உலக வங்கி வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், நடப் பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 3.2 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மதிப்பிட்டிருந்தது.உலக வங்கி மட்டுமல்லாமல், சர்வதேச நாணய நிதியம், பிட்ச் ரேட்டிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டில் மாபெரும் வீழ்ச்சி இருக்கும் என்றே எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

;