கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ``இணைந்து செயல்படுவதன் மூலம் கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும். இந்தியாவின் வலிமையே நம்முடைய கலாசாரம்தான். ஒருவரை ஒருவர் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களையும் கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.