புதுதில்லி:
அமெரிக்காவிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்து 290 கோடி செலவில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்களன்று நடைபெற்ற பாதுகாப்புத்துறை தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதன்படி ராணுவத்துக்கு 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன. இதன் மதிப்புரூ. 780 கோடி ஆகும். இதுதவிர, இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளுக்குத் தேவையான- இலக்கைத் துல்லியமாக தாக்கி அழிக் கும் ஆயுதங்கள் ரூ. 970 கோடிமதிப்பீட்டிலும், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தடையில்லாமல் ரேடியோதகவல்களை பெறும் வகையில் ரூ. 540 கோடிக்கு எச்.எப்.டான்ஸ் ரிசீவர் கருவிகளும் வாங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இதற்கு முன்பு 2019-இல்அமெரிக்காவிடம் இருந்து ரூ.700 கோடி மதிப்பில், 72 ஆயிரத்து 400 தானியங்கி துப்பாக்கிகள் வாங்குவதற்குஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டு இருந்தது.இந்த துப்பாக்கிகள் அனைத்தும் அமெரிக்காவிடம் இருந்து தற்போது இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.