tamilnadu

img

இந்தியா - மியான்மர் இடையே 10 ஒப்பந்தங்கள்

புதுதில்லி:
இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே பத்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.மியான்மர்  ஜனாதிபதி யு வின் மைன்ட்,தன் மனைவி டாவ் சோ சோவுடன் 4 நாட்கள்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.இவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் தில்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, மியான்மர் அதிபர்யு வின் மைன்ட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியா-மியான்மர் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் பெரும்பாலானவை மியான்மர் நாட்டில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

;