கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடியில் தற்கொலை நடப்பது புதிதல்ல என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத்தெரிய வந்துள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 8 ஐஐடி-களில் 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த தற்கொலைகளில் ஐஐடி மெட்ராஸ் முதலில் உள்ளது. அங்கு 14 தற்கொலைகள் அரங்கேறி உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் பாத்திமா லத்தீப்பின் தற்கொலை உள்பட மெட்ராஸ் ஐஐடியில் நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தனது தற்கொலைக்கு பேராசிரியர்கள் மூவர் தான் காரணம் என்று பாத்திமா தனது மொபைல் நோட்டில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை விபரம்:
மெட்ராஸ் - 14
கராக்பூர் - 13
கவுகாத்தி - 8
ரூர்கி - 5
டெல்லி - 4
கான்பூர் -4
ஹைதராபாத் - 2
மும்பை -2
ஐஐடியில் நடக்கும் தொடர் தற்கொலைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.