ஸ்ரீநகர்:
குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆறு அரசியல் கட்சிகளும் வரவிருக்கும் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்களில் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கின்றன.குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் செய்தித்தொடர்பாளரான சஜாத் லோன், இது தொடர்பாக செய்தியாளர்களிடையே கூறியதாவது:“குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று மாவட்டவளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்களில் போட்டி யிடுவது எனத் தீர்மானித்திருக்கின்றன. ஜனநாயகத்தில் கிடைக்கக்க் கூடிய புனிதமான இடத்தை, பிரிவினை சக்திகள் உட்புகுவதற்கும், கொள்ளையடித்துச் செல்வதற்கும் அனுமதிக்க முடியாது.”
இவ்வாறு முடிவு மேற்கொண்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெரியகட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் 2018இல்நடைபெற்ற பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தலைகளைப் புறக்கணித்தன. இப்போது மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கின்றன.இதுதொடர்பாக கூட்டம் ஜம்முவில் உள்ள பரூக் அப்துல்லா இல்லத்தில் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் மாநாடு, அவாமி தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்கள்இயக்கம் ஆகிய ஆறு கட்சிகளின் உயர் மட்டத் தலைவர்களும் கலந்து கொண்டா ர்கள்.கூட்டணியின் தலைவர்கள், சீக்கியர்கள், காஷ்மீரி பண்டிட்டுகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள், குஜ்ஜார்கள், பிஎஸ்பி மற்றும் பல்வேறு இனங்களின் தலைவர்களையும் சந்தித்தார்கள்.
காங்கிரசும் போட்டி
இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ. மீர் தனியே செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தி, தங்கள் கட்சியும் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகத் தெரி வித்தார். (ந.நி.)