நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 671 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,03,832லிருந்து 10,38,716ஆக உயர்ந்து உள்ளது
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,35,757லிருந்து 6,53,751ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602லிருந்து 26,273ஆக உயர்ந்து உள்ளது.