புதுதில்லி, செப்.1- ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை சிதைத்துள்ளது மத்திய பாஜக அரசு . காஷ்மீ ரின் முன்னாள் முதலமைச்சர் கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் தங்கள் உற வினர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் நாளில் செல்போ னில் உறவினர்களுடன் பேச தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது உறவினர்களை நேரில் அழைத்து சந்திக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டது. ஸ்ரீநகர் ஹரிநிவாசில் சிறைவைக்கப் பட்டிருக்கும் ஓமரை அவரது குடும்பத்தினர் 20 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர். சுற்றுலாத் துறையின் விடுதி ஒன்றில் சிறைவைக் கப்பட்டுள்ள மெஹ்பூபா முப்தியும் தமது தாயார் உள் ளிட்டோரை சந்திக்க வாய்ப்ப ளிக்கப்பட்டது.