tamilnadu

img

இந்து வாழ்வியல் முறைக்கு கிடைத்ததே பாஜக-வின் வெற்றி!

புதுதில்லி:
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு இந்துத்துவா அலைதான் காரணமே தவிர, மோடி அலை அல்ல; என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறியிருந்தார். தற்போது அதே கருத்தை ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யாவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைத்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
“2019-ஆம் ஆண்டு தேர்தலில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் போட்டியிட்டனர். அதில் உலகம் அறிந்த இந்து வாழ்வியல் முறையும் ஒன்றாக இருந்தது. சாதி, மொழி, பிராந்தியம், மதத்தின் பெயரால் தனிப்பட்ட விருப்புகளுக்காகப் பிரிவினைவாதம் பேசும் மற்ற சித்தாந்தங்களும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தல், இந்து வாழ்வியல் முறைக்கும், பிரிவினைவாத அரசியலுக்கும் இடையில் நடந்த போட்டியாக இருந்தது. அந்த வகையில், இந்தியாவானது, சுதந்திரம் அடைந்ததிலிருந்து தத்துவார்த்த அரசியல் பயணத்தில் ஒரு தீர்க்கமான கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. நாளுக்கு நாள் பாரதத்தின் எதிர்காலம் பிரகாசமாகிறது.”
இவ்வாறு வைத்யா கூறியுள்ளார்.