tamilnadu

img

மாட்டு சிறுநீரைக் குடித்த இந்து மகா சபையினர்... கொரோனாவைத் தடுக்கும் என்று கோமாளித்தனம்

புதுதில்லி:
மாட்டுச் சிறுநீரை, ‘கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து’ என்று கூறி, அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர், குவளை குவளையாக குடித்த கோமாளித்தனம் தில்லியில் அரங்கேறியுள்ளது.கொரோனாவைக் கட்டுப் படுத்துவற்கு, டீ பார்ட்டி போல, நாடு முழுவதும் “கோமியம் பார்ட்டி” நடத்தப் போவதாக இந்து மகா சபைத் தலைவரான சாமியார் சக்கரபாணி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படியே தலைநகர் தில்லியில் கோமியம் பார்ட்டி நடைபெற் றுள்ளது.

நிகழ்ச்சியின்போது, மாட் டின் சிறுநீர் நிரப்பப்பட்ட குவளைகளை வைத்து பூஜை நடத்திய இந்து மகா சபையினர், பின்னர்அந்த குவளைகளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, ‘கொரோனா வராது.. கொரோனா வராது’ என கோஷம் போட்டபடியே, அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மூச்சில் குடித்து முடித்துள்ளனர்.இதுதொடர்பான வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும்சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

;