tamilnadu

img

அர்னாப் கோஸ்வாமி  ஜாமின் வழங்க மும் உயர் நீதிமன்றம் மறுப்பு

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை  உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
கடந்த 2018ம் ஆண்டு கட்டிட உள் வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கும் அவரது தாய் குமுத் நாயக்கும் தற்கொலை செய்து கொண்டனர்.  தற்கொலை செய்துகொண்ட அன்வய் நாயக் மற்றும் குமுத் நாயக் இருவரும், அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவரது பெயரையும் தங்களின் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டு, தங்களுக்கு அளிக்கவேண்டிய 5.40 கோடி ரூபாயை அவர்கள் தராத காரணத்தால் நிதி நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்திருந்தனர் .
 இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டிதாக அர்னாப் கோஸ்வாமி மீது ஏற்கனவே புகார் இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக்  ரிபப்ளிக் சேனலிலிருந்து நிலுவையில் உள்ள தொகையை செலுத்தாதது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்யவில்லை. அதனால் தான் தனது தந்தை மற்றும் பாட்டி தற்கொலை செய்துகொண்டதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ் முக்கிடம் புகார் அளித்தார். இதையடுத்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மறு விசாரணைக்கு உத்தரவிட்டார். 
இந்நிலையில் அலிபாக் காவல்துறையினர் அர்னாப்பை அவரது வீட்டிலிருந்து கைது செய்தனர். அர்னாப்பை கைது செய்ய வீட்டிற்கு சென்ற போது பெண் காவலரை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதில் 3 பேரையும் வருகிற 18-ந் தேதி வரை கோர்ட்டு காவலில் அடைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் 3 பேரும் கொரோனாவை தொடர்ந்து அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இதற்கிடையே ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வில் நேற்று முழுவதும் விசாரிக்கப்பட்ட நிலையில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்தி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மீதான உத்தரவு இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை இன்று பிற்பகல் விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரம் அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிதிஷ் ஷர்தா மற்றும் பெரோஷ் ஷேக் ஆகியோரின் ஜாமீன் மனு குறித்து நான்கு நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.