tamilnadu

img

தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்

புதுதில்லி, ஜன. 13- தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுங்குளிருடன் பனிமூட்டம் நிலவுவதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகரில், திங்களன்று காலை 8 டிகிரி செல்சியஸ் அள விற்கு தட்பவெப்பம் பதிவானது. கடுமையான பனிமூட்டம் நிலவுவதன் காரணமாக, ரயில் களுக்கான சிக்னல்கள் தெளி வாக தெரியவில்லை. இதனால், தில்லி வந்து செல்லும் 15 எக்ஸ் பிரஸ் ரயில்கள், 2 மணி நேரம் முதல், 5 மணி நேரம் வரையில் காலதாமதமாக இயக்கப்படு கின்றன. தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில், அடுத்த சில நாட்களுக்கு, கடும்  பனிமூட்டம் தொடரும் என கூறியிருக்கும் இந்திய வானிலை மையம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தில் பனிப் பொழிவு கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. 

;