சண்டிகார்:
வேளாண் சட்டங்கள் தொடர்பான என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங் கள், இல்லையேல் ஆட்சியிலிருந்து வெளியேறுங்கள் என்று ஹரியானா மாநிலத்துணை முதல்வரும், விவசாயிகள் கட்சி என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ஜேஜேபி எனப்படும் ஜனநாயக ஜனதாக் கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சௌதாலாவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தேசிய செயற்குழு உறுப்பினரும், ஸ்வராஜ் இந்தியா தேசியத் தலைவருமான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
சண்டிகாரில் 17 விவசாயசங்கங்களின் சார்பில் விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த துஷ்யந்த் சௌதாலாவின் வீட்டை முற்றுகையிடத் தீர்மானித்துள்ளனர். சிர்ஷாவில் உள்ள அவர் வீட்டை அக்டோபர் 6 அன்று இவ்வாறு முற்றுகையிடத் தீர்மானித்துள்ள னர். இது தொடர்பாக நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு யோகேந்திர யாதவ் பேசியதாவது:ஹரியானாவில் இயங்கும் அனைத்து விவசாய அமைப்புகளும் இச்சட்டங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி யிருக்கும் நிலையில், விவசாய சங்கத்தின் தலைவர் தேவிலால் சௌதாலா வம்சாவளியைச் சேர்ந்த துஷ்யந்த் சௌதாலா மட்டும் விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவந்துள்ள இச்சட்டங்களை ஏன் ஆதரிக்க வேண்டும்?இவற்றுக்கு துஷ்யந்த் சௌதாலா பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்.இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறினார். (ந.நி.)