tamilnadu

img

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொலை வழக்கு... சிபிஐ நேர்மையாக விசாரிக்குமா?

புதுதில்லி:
மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொலை தொடர்பான வழக்கு விசாரணை தனக்கு வந்தவுடன் அது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை, நீக்கிவிட்டது.  முன்பு இந்த முதல் தகவல் அறிக்கையானது இந்தியத் தண்டனைச் சட்டம் 307 (கொலை செய்யமுயற்சி), 376-டி (பாலியல் கும்பல்வன்புணர்வு), 302 (கொலை), தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் 3(2)(வி) ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இப்போது சிபிஐ, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்ணின் சகோதரர், தன் சகோதரியை யாரோ கழுத்தை நெறிக்க முயன்றதாக அளித்திட்ட ஒரு புகார் மனுவைப் பெற்று அதனை இந்தியத் தண்டனைச் சட்டம் 307 (கொலை செய்ய முயற்சி) என்ற பிரிவின்கீழ் பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. இது, சிபிஐ விசாரணை முறையாக நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஹத்ராஸ் தலித் இளம்பெண் கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பலியான வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆா்) ஞாயிற்றுக்கிழமை காலை பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது.இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை பாதுகாக்க குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாக கூறப்பட்டதைத் தொடா்ந்து, பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் பெரும் சா்ச்சையாக உருவெடுத்ததைத்தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுமாறு உத்தரப்பிரதேச அரசு கேட்டுக்கொண்டது. அதை ஏற்று, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதனடிப்படையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ கையிலெடுத்துள் ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையை மாற்றியிருப்பதால், சிபிஐ விசாரணை எப்படிச் செல்லும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஆா்.கே.கெளர் கூறுகையில், ‘பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி, பின் உயிரிழந்த இளம் பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்ததாக அந்த பெண்ணின் சகோதரா் ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்’ என்று கூறினார்.