tamilnadu

img

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு துணை நிற்கும் கூகுள்

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு ஆதரவாக கூகுள் நிறுவனம் துணை நிற்கும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் மினிசொட்டா மாகாணத்திலுள்ள மியாமி பொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் காவல் துறையினரால் படு கொலை செய்யப்பட்டார்.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறன்று 40க்கும் அதிகமான நகர்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது 16 மாகாணங்களில் உள்ள 25 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த  பல இடங்களில் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை ஒடுக்க முயன்று வருகின்றனர். 

இந்தநிலையில், பிரபல சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூடியுப் ஆகியவை, இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,  ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும். துக்கம், கோபம், சோகம் மற்றும் பயத்தை உணருபவர்களே, நீங்கள் தனியாக இல்லை. இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவையும், கருப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும், ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களின் நினைவாகவும் இதை பகிர்ந்து கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.