tamilnadu

img

கோவா:  கொரோனா தொற்றுக்கு இன்று முதல்பலி

கோவாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று முதல் நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறியதாவது: வடக்கு கோவாவின் மோர் லெம் நகரைச் சேர்ந்த பெண் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மூச்சுத்திணறல் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் பலி இதுவாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.