கோவை தந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வரிசையில் கோவை சுப்ரமணியம் என்கிற ‘சுப்ரி’ அவர்களுக்கு ஓர் முக்கிய இடம் உண்டு. கோயம்புத்தூரில் உள்ள சலிவன் தெருவில் கோவை வேணு கோபால சுவாமி தெப்பக்குள வீதி தான் அது. அதற்கு ‘சுப்ரி’ தெரு என் றொரு பெயர் உண்டு. கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் தோன்றி வளர காரணமாக இருந்த வர்களுள் சுப்ரி அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தோற்றத்தில் மிகவும் மெலிந்தவராகினும் மன உறுதியில் இரும்பினை காட்டிலும் உறுதி படைத்தவர். இவர் அப்போ தைய கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவுக்குச் செயலாள ராக இருந்து ஏறக்குறைய அனைத்து காங்கிரஸ் மாநாடுகளுக்கும் சென்று வந்தவர்.
போராட்டங்களும், சிறை தண்டனைகளும்..
கோவை மாவட்டத்தில் கிராமம் தோறும் காங்கிரஸ் கட்சிக்கு கிளை களைத் தோற்றுவித்தவர். 1921 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த கொடிப் போராட்டத்துக்கு இவர் 12 தொண் டர்களோடு சென்று பங்கேற்றதால் ஓராண்டு சிறை தண்டனை பெற் றார். இவருடைய தந்தையார் பெயர் கிருஷ்ண ஐயர். 1924 ஆம் ஆண் டில் கோவை மாவட்டத்தில் பயங்கர வறட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினி யால் மடிந்தனர். அரசாங்கம் இதை அதிகம் பொருட்படுத்தாமல் அலட்சி யம் காட்டியது. ஆனால் சுப்ரி அவர்கள் அவிநாசிலிங்கம் செட்டி யார், சி.பி.சுப்பையா ஆகியோரு டன் சேர்ந்து பல நிவாரண உதவி களைச் செய்து மக்கள் மாண்டு போகாமல் காத்தனர். 1925 இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்க கதர் இயக்கத்தின் நாய கரான கோவை அய்யாமுத்து அவர்களோடு சேர்ந்து சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப்பின் கதர் உற்பத்தில் பல கிராமங்களிலும் அதிகரித் தது. 1929 இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந் திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஜனவரி 26 ஆம் தேதியை நாட்டின் விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடி வினை கோவை மாவட்டம் முழுவ தும் சுற்றுப்பயணம் செய்து சுப்ரி அவர்களும் மற்ற தேசபக்தர்களும் மக்களுக்குத் தெரிவித்தனர்.
மேலும், 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டபோது அந்த போராட் டம் நடைபெற்ற அனைத்து நாட் களும் சுப்ரி கோவையில் ஊர்வ லங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தில் சுப்ரி ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்த போரட்டத்தின் காரணமாகவே அவிநாசிலிங்கம் செட்டியார், பாலாஜி போன்றவர்களும் தண்டிக் கப்பட்டனர். 1932 இல் அந்நிய ஆங் கில அரசு இந்திய காங்கிரஸ் இயக் கத்தை சட்ட விரோதமானது என்று தடை செய்தபோது தலைவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகினர். அப்போது அந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து போராடிய தற்காக சுப்ரி, அவரது இளம் மனைவி கமலம், தாயார் பாகீரதி அம்மாள் ஆகியோர் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். மூவருக்கும் ஆறுமாத கடுங் காவல் தண்டனை கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் திருப்பூ ரில் போலீசாரின் தடியடியில் குமார சாமி எனும் தொண்டர் (திருப்பூர் குமரன்) பலியானார். 1933இல் மறு படியும் அந்நிய துணிக்கடை மறி யலில் ஈடுபட்டு இவரது மனைவி கமலம், மற்ற தொண்டர்களான அம்புஜம் ராகவாச்சாரி, முத்து லட்சுமி, நாராயண சாஸ்திரி ஆகி யோர் நான்கு மாத சிறை தண்டனை பெற்றனர். அதே ஆண்டில் ராஜாஜி தலைமையில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக சுப்ரி, திருமதி சுப்ரி, கோவிந்தம்மாள், அய்யா முத்து, உடுமலை சாவித்திரி அம் மாள், பி.எஸ்.சுந்தரம், அவரது மனைவி, தாயார் ஆகியோர் கைதாகி ஆறுமாத தண்டனை பெற்றனர்.
‘மை லெளட் ஸ்பீக்கர்’
சுப்ரி அகில இந்திய தலை வர்கள் பலரை அழைத்து வந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தினார். ராஜாஜி யுடன் இவர் வேலூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார். காந்தியடிகளின் சொற்பொழி வுகளை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை இவர் செய்து வந்தத னால், இவரை ‘மை லெளட் ஸ்பீக்கர்’ என்றே காந்தி அன்போடு அழைத்தார். 1941 இல் ஜாலியன் வாலாபாக் தினமாக அனுசரித்து கூட்டம் நடத்திய காரணத்துக்காக சிறை தண்டனை பெற்று பொள் ளாச்சி கொண்டு செல்லப்பட்டார். 1942 இல் ‘வெள்ளையனே வெளி யேறு’ போராட்டத்தில் இவர் பாது காப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தண்டனை அனுபவித் தார். பிறகு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தபின் நாடு விடுதலையின் போது விடுதலை யாகி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதன்பின் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பி னர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கோவை நகர சபை தலைவர்; 1947-52 காலகட் டத்தில் சென்னை சட்டசபை உறுப் பினர் இப்படி பல நிலைகளில் பணி யாற்றி நாட்டின் விடுதலைக் காக மட்டுமின்றி, முன்னேற்றத்திற் காகவும் தனது இன்னுயிரை அர்ப் பணித்து மறைந்தார்.