புதுதில்லி:
நாணயம் மற்றும் தங்க சொத்துக்களின் சரிவு காரணமாக செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 42 ஆயிரத்து 857 கோடி டாலராக குறைத் துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை மூலம், மேலும் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு:2019 ஆகஸ்டில்தான் ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறுகாணாத அளவுக்கு உச்சத்தை அடைந்தது.அப்போது, 43 ஆயிரத்து 057 கோடி டாலர்வரை அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்தது. ஆனால், ஒரு மாதத்திற்குள் செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தவாரத்தில் 42 ஆயிரத்து 857 கோடி டாலராககையிருப்பு குறைந்துள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 64 கோடி டாலர் குறைந்து, 42 ஆயிரத்து 896 கோடி டாலராக நிலைபெற்றிருந்த நிலையில், தற்போது அதைக்காட்டிலும் 38 கோடிடாலர் குறைவு ஏற்பட்டுள்ளது.அமெரிக்க டாலர் அடிப்படையில் அந்நிய செலாவணி மதிப்பு கணக்கிடப் பட்டாலும், அந்நிய செலாவணி சொத்துக்களில் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்கா அல்லாத நாணயஅலகுகளின் மதிப்புகளும் அடங்கும் என் பது குறிப்பிடத்தக்கது.இந்த வகையில், மொத்த நாணயங்களின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் சுமார் 12 கோடிடாலர் குறைந்து, 39 ஆயிரத்து 667 கோடிடாலர்கள் ஆகியுள்ளது. தங்க இருப்புக் களின் மதிப்பு 20 கோடியே 59 லட்சம் டாலர் குறைந்து 2 ஆயிரத்து 784 கோடி டாலர்களாக குறைந்துள்ளது.இதன்மூலம் இந்தியா வைத்திருக்கும் விலைமதிப்பற்ற உலோகத்தின் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது.