புதுதில்லி:
மத்திய சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் அமைச்சகம், கடந்த ஜூலை மாதம், மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் 2020-இல் சில திருத்தங்களை வெளியிட்டது. அதில், திருநங்கையர் குறிப்பிடும் பாலினத்தை மாவட்ட மாஜிஸ்திரேட் சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மாவட்ட மாஜிஸ்திரேட் போன்ற மூன்றாவது நபர் சரிபார்த்து சான்றிதழ் கொடுப்பது, திருநங்கையரின் தகுதிகளைப் பறித்துக் களங்கப்படுத்துவது போன்றது என்று ‘எல்ஜிபிடி’ சமூகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, திருநங்கையர் தாங்கள் விரும்பிய பாலினத்தை தெரிவிக்க இனி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அவசியமில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது.