tamilnadu

img

பஞ்சாப், ராஜஸ்தானைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் மாநில வேளாண் சட்டம் நிறைவேற்றம்....

ராய்பூர்:
பஞ்சாப், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசாங்கங்களை அடுத்து, தற்போது சத்தீஸ்கர் மாநிலகாங்கிரஸ் அரசாங்கமும், மத்தியஅரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை மறுதலிக்கும் விதத்தில் மாநில வேளாண் சட்டத்தை மாநில சட்டமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று நிறைவேற்றியுள்ளது.இந்தச் சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தவிவசாயத்துறை அமைச்சர் ரவீந்திரா சௌபே, விவசாயப்பொருள்களைச் சந்தைப்படுத்தும் போது விவசாயிகளைப் பாது காப்பதற்காக இச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டதாகத் தெரி வித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஏற்கனவே இருந்துவரும் சட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக இப்போது ஏழுதிருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இதனை நாங்கள் எங்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமைகள் மற்றும் அதிகாரவரம்பு எல்லைக்கு உட்பட்டே இதனைச் செய்திருக்கிறோம். விவசாய விளைபொருள்களை சந்தையில் விற்பனை செய்யும்போது ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கணக்கில் கொண்டு இதனைக் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம், விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களுக்கு பணமும் காலத்தே கிடைத்திடவும் அரசாங்கத்தின் சார்பில் ஒரு சந்தை அமைத்திடவும், மின் வர்த்தகமேடை (Electronic Trading Platform) அமைத்திடவும் வகை செய்திருக்கிறோம். இது விவசாயி களின் நலன்களைப் பாதுகாத்திட மிகவும் அவசியமாகும்.”மேலும் இந்தச் சட்டமானது விவசாயிகளில் 80 சதவீத அளவிற்கு இருந்துவரும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மிகவும் உதவும் என்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் தரப்பில் கூறப்பட்டது.  (ந.நி.)