tamilnadu

img

நாட்டில் காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

நாட்டில் காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளனர். 
தலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

நாடு முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலங்களில் (என்சிஆர்) பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. காற்று மாசு மிக மிக மோசமான பிரிவு மற்றும் மோசமான பிரிவு பகுதிகளான நகரங்கள், மாநகரங்களில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்க வேண்டும். நவம்பர் 9ம் தேதி முதல் 30ம் தேதி வரை தடையை அமல்படுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 
மேலும் காற்று மாசு குறைவாக உள்ள பகுதிகளில்2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது.