புதுதில்லி:
யானை மீது யோகா செய்துகாட்ட முயன்ற ‘பதஞ்சலி’ சாமியார் ராம்தேவ், யானை சற்று அசைந்ததால் கீழே விழுந்து முதுகில் பலத்த அடிபட்டுள்ளார்.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ராம்தேவ், யோகா பயிற்சியை வித்தியாசமான கோணங்களில் செய்துகாட்டு வதில் தேர்ந்த வித்தைக்காரர். 2002 முதல்கடந்த 19 ஆண்டுகளில் யோகா மூலமாகவே,பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டி, இன்று ‘பதஞ்சலி’ என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் முத
லாளியாகவும் வலம் வருகிறார்.
சமீபகாலமாக உத்தரப்பிரதேச மாநிலம்மதுராவில் உள்ள குரு ஷரனன் ஆசிரமத்தில் துறவிகளுக்கு யோகா கற்றுத் தரும்பணியில் ஈடுபட்டு வந்த ராம்தேவ், பயிற்சியின் ஒருபகுதியாக, யானை மீது எப்படி யோகா செய்வது? என்பதையும் துறவிகளுக்கு செய்துகாட்ட முடிவுசெய்துள்ளார்.அதன்படி பட்டத்து யானை போல், அலங்கரித்து கொண்டுவரப்பட்ட யானைமீது கால்களை மடக்கியவாறு அமர்ந்து யோகா செய்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக யானை லேசாக அசைந்ததால், ராம்தேவ் யானையிலிருந்து தொப்பென்று கீழே விழுந்து அடிபட்டுள்ளார்.முன்னதாக அருகிலிருந்தவர்கள் விரைந்து சென்று அவரை தூக்கியுள்ளனர். ஆனால், அடி எதுவும் படாதது போலவும், வலிக்காதது போலவும் சிரித்துக் கொண்டேராம்தேவ் எழுந்துள்ளார். எனினும், ராம்தேவுக்கு முதுகுப் பகுதியில் பலத்த அடி விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.ராம்தேவ் யானையிலிருந்து விழுந்தகாட்சிகளைக் கொண்ட சுமார் 22 விநாடிகள் அடங்கிய வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் சைக்கிள் ஓட்டும்போதும், சாலையோர வளைவில் ராம்தேவ் சறுக்கி விழுந்து அடிபட்டார். அந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் அப்போது வைரலானது.