tamilnadu

img

திருப்பதியில் விஐபி டிக்கெட் வாங்கிய போலி அதிகாரி  கைது

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி போலி அடையாள அட்டையைக் காண்பித்து, விஐபி தரிசன டிக்கெட் வாங்கியவரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்ற நபர் கூடுதல் செயல் அலுவலர்அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றுள்ளார். அருண்குமாரின் அடையாள அட்டையில் சந்தேகமடைந்த  தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ,அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னாள் அமைச்சர் முகேஷ்கவுடு உள்ளிட்ட பலரிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பதும் தரிசனத்துக்காக அடையாள அட்டையில் ஐபிஎஸ் என அச்சிட்டு டிக்கெட் பெற முயன்ற தும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

;