கண்ணூர்:
கோவிட் பரவுவதைத் தடுப்பதில் முதலாளித்துவம் ஒரு முழுமையான தோல்வியை கண்டுள்ளது என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறினார். 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் 2008 இன் நிதி நெருக்கடியும் இப்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய கோவிட் பேரழிவுமாகும். இரண்டையும் சமாளிக்க முதலாளித்துவம் தவறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘மார்க்சியத்தின் சமகால பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் சிபிஎம் கண்ணூர் மாவட்டக் குழுவின் முகநூல் பக்கத்தில் அவர் மேலும் பேசியதாவது: எல்லாவற்றிற்கும் தீர்வு புதிய தாராளமயக் கொள்கை மற்றும் உலகமயமாக்கல் என்று முதலாளித்துவம் கூறியது. ஆனால் முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடியை நோக்கிய பயணத்தில் உள்ளது. இது இறுதி நிலை அல்ல. சுரண்டல் மற்றும் போட்டியின் அடிப்படையில் நீடிப்பதாகும்.
போப் பிரான்சிஸ் கூட வெளிப்படையாக முதலாளித்துவத்தால் முன்வைக்கப்பட்ட புதிய தாராளமயமும் உலகமயமாக்கலும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கத் தவறிவிட்டன என்று கூறியுள்ளார். முதலாளித்துவம் சமத்துவமின்மையை உருவாக்கி யுள்ளது. ஏகபோகங்களின் இலாபங்களி லிருந்து உதிரியாவதன் பங்குகூட ஏழை களுக்கு கிடைக்கவில்லை. போட்டி அல்ல, ஒத்துழைப்பே தேவை, வன்முறை தேசியவாதம் ஆபத்தானது என்று போப் கூறுகிறார். 1848 கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் கூறியது இதுதான். மார்க்சியத்தை எதிர்த்தவர்கள் கூட இப்போது அதன் நண்பர்களாகி வருகின்றனர்.இடது- வலது மாற்றத்திற்கு எதிராக சிபிஎம் நின்றது. நேரம் அதை சரி என நிரூபித்துள்ளது. கேரளத்தில் உள்ள அரசைகவிழ்க்க காங்கிரசும் பாஜகவும் ஒன்றுபடு கின்றன. ஆனால், கேரளத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் இதை அனுமதிக்காது என்று எஸ்ஆர்பி தெளிவுபடுத்தியது.