உலகம் முழுவதும் கொரோனா பரவக்கொண்டிருக்கும் காலத்தில்,மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் அகிய செயலிகளை பயன்படுத்துவதும்,அதில் வரும் தகவல்களை உண்மை என்று நம்பி பகிர்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸ் பரப்பியதாகவும், தேசத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக பாஜக அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டனர். அந்த கருத்தை நீக்க பேஸ்புக் நிறுவனம் “எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னலில், “இந்திய அரசியலுடன் மோதும் முகநூல் நிறுவனத்தின் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான விதிகள்” (Face book’s Hate-Speech Rules Collide With Indian Politics) என்ற பெயரில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ,இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செயலிகள் ஆர்எஸ்எஸ், பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல்காந்தி நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் குற்றம்சாட்டி இருக்கிறார்.
“இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்புப் பிரச்சாரங்களை முக நூல் நிறுவனம் நீக்குவது இல்லை. பாஜக மட்டுமன்றி ,இந்து அமைப்புகள் மற்றும் கட்சிகள் செய்யும் வெறுப்புப் பிரச்சாரங்களையும் முகநூல் அனுமதிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. இந்திய முகநூல் குழுவில் இருக்கும், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலர், பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்; வன்முறையை தூண் டும் வகையில் பாஜக-வினர் செய்யும் போஸ்ட்களை வேண்டும் என்றே நீக்கு வது இல்லை என்று ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ தெரிவித்துள்ளது.
பாஜகவின் தில்லி தலைவர் கபில் மிஸ்ரா, கர்நாடக தலைவர் அனந்த குமார் ஹெக்டே போன்ற சில தலைவர்கள் செய்யும் மதவெறி பதிவுகளையும் முகநூல் நீக்கு வது இல்லை. கபில் மிஸ்ரா-வின் போஸ்ட் தில்லி கலவரத்திற்கு வழி வகுத்தது என்று முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கே- ஒருமுறை பெயர் குறிப்பிட்டு பேசினார். கலவரத்தைத் தூண்டும் வகையில் கபில் மிஸ்ரா பேசிய வீடியோ ஒன்றை முகநூல் நிறுவனம் நீக்கியது. ஆனால் மற்ற பதிவுகள் நீக்கப்படவில்லை. இவற்றுக்கெல்லாம், இந்திய முகநூல் குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த பெண் அதிகாரியான அன்கி தாஸ் என்பவரே முதன் மைக் காரணம் என்ற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன்வைத்துள்ளது.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் காவல்துறை விசா ரணையில் கொல்லப்பட்டதை அடுத்து முக நூலிலும், பதிவேற்றப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தடுக்க புதிய விதிமுறைகள் வகுக் ப்பட்டன. ஆனால், அவற்றை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு அன்கி தாஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வால் ஸ்டிரீட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஆளும் கட்சியை பகைத்துக் கொண்டால், தங்களது முகநூல் நிறுவ னத்திற்கு சிக்கலாகும்; மிகப்பெரிய இந்திய சந்தையை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் முகநூல் நிறுவனமும், பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர்களின் வெறுப்பு பேச்சுக்கள் எதை ம் நீக்குவது இல்லை என்று ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நாங்கள் தடை செய்கிறோம். எந்த ஒரு நபரின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி சார்பற்று உலக அளவில், எங்களது கொள்கைகளை அமல்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னலில் உள்ள புகார்களை பார்க்கும் போது பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.