கொரோனா சோதனைகளை விரிவுபடுத்துங்கள் என்று மோடிக்கு ஐஎம்ப் பொருளாதார நிபுணர் கோபிநாத் அறிவுரை கூறி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பெருந் தொற்று கடும்பொருளாதார நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டும் 4.5 சதவிகிதம் சரிந்து 1 சதவிகிதத்திற்கும் கூடுதலாகவே வளர்ச்சி இருக்கும் என ஐஎம்எப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்புகளை கடந்து கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் கூறியதாவது:-
“2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான வளர்ச்சி கணிப்புகளை பார்க்கும்போது இந்தியாவில் வளர்ச்சி 1 சதவிகிதத்திற்கும் சற்று கூடுதலாக இருக்கும் அவ்வளவே. இது வலுவான நிலை இல்லை, ஆனால் உலகெங்கும் பிற நாடுகளிலும் இதே நிலைதான். இந்தியாவில் இந்த ஆண்டு பெரிய அளவில் சரிவு இருக்கும். எல்லாம் சரியாகும் போது இந்தியாவும் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும்.” என்றார்.
இந்நிலையில் மோடிக்கான ஆலோசனையாக அவர் கூறியதாவது, “இந்தியா தனது கொரோனா சோதனை திறன்களை விரிவுபடுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களுக்கு கையில் ரொக்கம் உள்ளிட்ட திட்டங்கள் உதவும். அதே போல் சிறு, குறு நடுத்தர தொழில்கள் நசிவடையாமல் பாதுகாப்பது, மேலும் சீர்த்திருத்தங்களுக்கான வாய்ப்புகளை அங்கீகரிப்பது” என்றார்.
அப்போது அவர் சீனா பெரிய பொருளாதாரங்களில் நேர்மறையான வளர்ச்சியுடன் உள்ளது. இன்னொரு பொருளாதாரத்தை இந்தக் காலக்கட்டத்தில் அதற்கு இணையாகக் கூற முடியவில்லை. கொரோனா மீட்சி வலுவாக உள்ளது. வைரஸை கட்டுப்படுத்துவதில் அவர்கள் விரைவில் வெற்றியடைகின்றனர். மிகச்சுருக்கமான காலக்கட்டத்தில் வைரஸை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
பொருளாதாரங்கள் மீண்டும் திறந்தாலும் கொரோனா குறித்த நிச்சயமின்மை நிலைமையே உள்ளது, இந்த பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளில் 12 ட்ரில்லியன் டாலர்களை அழித்து விடும். ” என்றார்.