தமிழக உளவுத்துறை புதிய ஐஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்திய மூர்த்தி இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்து தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் ஈஸ்வர மூர்த்தியை உளவுத்துறையின் புதிய ஐஜியாக தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்வர மூர்த்தி ஏற்கனவே உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.