tamilnadu

img

மத்திய அரசுக்கு மின்ஊழியர் மத்தியமைப்பு வலியுறுத்தல்

பெரும் முதலாளிகளின் நலனுக்காக மாநில மின்வாரியத்தை துண்டாக்காதே! பஞ்சப்படியை முடக்காதே!

சென்னை,ஏப்.24-  பெரும் முதலாளிகளின் நலனுக்காக மாநில மின்வாரியத்தை துண்டாக்கக்கூடாது என்றும் பஞ்சப்படியை முடக்கக்கூடாது என்றும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர், மாநிலப் பொது ச்செயலாளர் எஸ். இராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: இந்திய நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தனக்கு பயன் படுத்திக்கொண்டு மத்திய மின் துறை அமைச் சகம் மாநில மின்சார வாரியங்களை பிரித்து விநியோக கம்பெனிகளாக (Discom) மாற்ற மின்சார சட்டத்திருத்த மசோதா-2020 வரைவு நகலை கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அனைத்து மாநில வாரியத் தலைவர்களுக்கும் மற்றும் மாநில ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் வழங்கி 21 தினங்களுக்குள் தங்களது கருத் துக்களை வரைவு நகலின் மீது தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.

மின்துறை அமைச்சகத்தின் வெட்கங்கெட்ட செயல்

மத்திய மின் துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை தேசம் முழுவதும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப் பதற்கு எதிர்கொண்டு போராடி வரும் நிலை யில் இந்திய மின் துறை அமைச்சகம் இந்தப் பணியை சத்தமில்லாமல் செய்து வருகிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

மாநில மின் வாரியங்களை விநியோக கம்பெனிகளாக மாற்றி பெரும் முதலாளி களை மின்சார விநியோகத்தில் ஈடுபட வைப்பது இதன் பிரதான நோக்கம். மின்சார சட்டம் - 2003இன் அடிப்படையில் சில மாநிலங் கள் வேகமாக மின்வாரியத்தின் கட்ட மைப்பை சிதைத்தது. இயற்கை பேரிடர் காலங்களில் மின் விநியோகத்தை, விநியோகம் செய்து வந்த தனியார் பெரு முதலாளிகள் அப்ப டியே விட்டு விட்டு சென்றது இந்தியாவில் ஏற்பட்ட அனுபவம் என்பதை மத்திய ஆட்சியா ளர்கள் மறந்து விட்டார்கள் போலும்.

தனியார் வர்த்தகர்களை மின் வினியோ கத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களே மின் நுகர்வோர்களை தேர்வு செய்யும் உரிமை யையும் இந்த சட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. தனியார் முதலாளிகள் நகர்ப்புற மின் நுகர் வோர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். ஏற்கனவே மின் உற்பத்தியில் ஈடுபட்டு ள்ள தனியார் பெரும் முதலாளிகள், அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை அவர்களே விநியோகிக்கும் உரிமையையும் பெற்றுவிடுவார்கள். அரசின் கேந்திரமான சேவைத்துறை தனியார் இடத்தில் மெல்ல மெல்ல செல்லும்.

மத்திய அரசின் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் மின்சார வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக ரூ 30,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியிருந்தார். மேலும் மாநில அரசுகளுக்கு மின் துறை சம்பந்தமான நிதி ஒதுக்கீடு என்பது மாநில மின்சார வாரியத்தை விநியோக கம்பெனிகளாக மாற்றிய பின்பே வழங்க இயலும் என தெரிவித்திருந்தார்.

மின்வாரியத்தை சிதைக்கும் அரசு

நிதி அமைச்சரின் பட்ஜெட் உரைக்குப் பின்பு மத்திய மின் துறை அமைச்சகம் மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 வரைவு நகலை தற்போது வெளியிட்டிருப்பது, மத்திய மோடி அரசு மாநில மின்சார வாரியத்தை சிதைக்கத் துவங்கிவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இந்திய நாடு முழுவதும் மின் ஊழி யர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு போரில் இரண்டாம் கட்ட தடுப்பு வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். சீல் வைத்த பகுதிகளில்கூட மின்தடை ஏற்பட்டதை யடுத்து மின் தடங்களை சரி செய்து வரும் பணியில் ஈடுபட்டுவரும் இந்தச் சூழலில் ஊரடங்கு நேரத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா - 2020 வரைவு நகலின் மீது கருத்துக் கோருவது இயற்கை நீதிக்கு முரணானது.

தேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை யில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக மத்திய மோடி அரசு அரசின் சேவைத் துறை களை காவு கொடுக்க முயற்சிப்பது அதானி வகையறாக்களை வாழ வைக்கவே. இந்தச் சூழ்நிலையில் இன்னும் ஒரு தாக்குதலை தொழிலாளி வர்க்கத்தின் மீது மோடி அரசு சுமத்தியுள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பஞ்சப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது கோவிட் 19 ஐ காரணம் காட்டி ஜனவரி 20, ஜூலை 20, ஜனவரி 21 ஆகிய பருவங்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படியை முடக்கி வைக்க உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் அடிப்படைச் சம்பளம் ரூ. 50 ஆயிரம் பெறும் ஒரு ஊழியர் ரூ.72 ஆயிரத்தை இழக்க நேரிடுகிறது. மத்திய மாநில அரசு ஊழியர்களின் இந்தப் பஞ்சப் படியை முடக்கி அவர்கள் தலையில் கை வைப்பதற்கு பதிலாக, தலைவர்களுக்கு சிலை, புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தேவையற்ற பயணங்களின் செலவுகளை குறைக்கலாம்.

சுவிஸில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டிடுக!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய வரிச் சலுகைகளை ரத்து செய்து வரியை செலுத்த வைப்பதின் மூலம் நிதி ஆதாரங்களை பெற முடியும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பெருமுதலாளி களின் கருப்புப் பணம் ரூ. 20 லட்சம் கோடியை மீட்கலாம். ஆனால் இவற்றை செய்வதற்கு மத்திய மோடி அரசிற்கு மனமில்லை. இந்தியாவில் இந்தக் கொடிய நோய் பரவாமல் தடுப்பதற்கு அர்ப்பணிப்பு மிக்க உணர்வுடன் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், மின்சாரத் துறை ஊழியர்கள் ,அரசு அலுவலர்கள் ஆகியோரின் பணிகளை கவனத்தில் கொண்டாவது மத்திய மோடி அரசு பஞ்சப் படியை முடக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசு எதிர்க்க வேண்டும்

பஞ்சப்படி முடக்கும் நடவடிக்கை என்பது மத்திய ,மாநில அரசு ஊழியர்களை பாதிப்பதோடு பல ஆண்டுகளாக பணியாற்றிய ஓய்வூதியர்களும் பாதிக்கப்படுவார்கள். அதேபோல மாநில மின்சார வாரியங்களை சிதைக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2020-ஐ கைவிட வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.