tamilnadu

img

பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 8 பேர் பலியாகினர்.  பனிச்சரிவு குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜம்மு -காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் அருகே திங்களன்று திடீரென பனிச் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவரை காணவில்லை. மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயத்துடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்,  கந்தர்பால் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொது மக்கள் 5 பேர் பலியானதாகவும், 4 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

;