கோவிட் 19 வைரஸ் மனித உயிர்களை மட்டுமல்ல; பொருளாதாரத்தையும் மிக ஆழமாக படுகுழியில் தள்ளியுள்ளது. ஒவ்வொரு தேசத்திலும் உழைப்பாளிகளும் சிறு தொழில் முனைவோரும் பாதித்துள்ளனர். மேலும் விமான நிறுவனங்கள் உட்பட பெரு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பல அரசாங்கங்கள் இந்த நெருக்கடியை சந்திக்க பல பொருளாதார திட்டங்களை அறிவித்துள்ளன. இந்திய அரசாங்கம்தான் மிக தாமதமாக பொருளாதார நிவாரணங்களை அறிவித்தது. மிக கடுமையான விமர்சனங்கள் முன்வந்த பிறகுதான் இந்த அறிவிப்பு கூட வெளிவந்தது. இந்திய அரசாங்கம் அறிவித்த திட்டம் என்பது 1,72,000 கோடி ரூபாய் ஆகும். இதிலும் விவசாயிகளுக்கு தரப்படும் ரூ 2,000 நிவாரணம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு, கட்டிட தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் ஆகியவை ஏற்கெனவே அமலில் உள்ளவை! புதியவை அல்ல! எனினும் உலக அளவில் பல முதலாளித்துவ அரசாங்கங்கள் அறிவித்த திட்டங்களை ஒப்பிடும் பொழுது இந்திய அரசாங்கம் அறிவித்தது மிக மிக குறைவு. இதனை கீழ்கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:
தேசம் | உதவி தொகை/ அமெரிக்கா டாலர் | மக்கள் தொகை/ கோடி |
மலேசியா | 58.00 பில்லியன் | 3.16 |
அமெரிக்கா | 1500.00 பில்லியன் | 32.72 |
சிங்கப்பூர் | 37.00 பில்லியன் | 0.56 |
ஆஸ்திரேலியா | 65.00 பில்லியன் | 2.46 |
ஜப்பான் | 556.00 பில்லியன் | 12.68 |
டென்மார்க் | 18.30 பில்லியன் | 0.56 |
பிரான்ஸ் | 356.00 பில்லியன் | 6.7 |
ஜெர்மனி | 1365.00 பில்லியன் | 8.28 |
இத்தாலி | 159.00 பில்லியன் | 6.05 |
நெதர்லாந்து | 17.55 பில்லியன் | 1.72 |
ஸ்பெயின் | 132.00 பில்லியன் | 4.67 |
பிரிட்டன் | 390.04 பில்லியன் | 6.64 |
இந்தியா | 22.50 பில்லியன் | 132.92 |
-https://www.bruegel.org/publications/datasets/covid-national-dataset/3
மேற்கண்ட நாடுகளின் விவரங்கள் உழைப்பாளிகள் மற்றும் சிறு நிறுவனங்க ளுக்கு அளித்த உடனடி நிவாரணம் மற்றும் கடன் தொகைதான் இவை! இது மட்டுமல்லாது பெரிய நிறுவனங்களுக்கு தனியாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதார ணத்திற்கு அமெரிக்கா 1500 பில்லியன் டாலர்கள் திட்டத்தை உழைப்பாளிகளுக்கும் ஏனைய பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறிவித்துள்ள அதேநேரத்தில் பெரு நிறுவ னங்களுக்கு தனியாக 500 பில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது.
இவற்றை ஒப்பிடும் பொழுது இந்திய அரசாங்கத்தின் திட்டம் எவ்வளவு சொற்பமா னது என்பதை அறியலாம். இந்தியாவின் ஜி.டி.பி.யில் வெறும் 0.8%தான் அறிவிக்கப்பட் டுள்ளது. முதலாளித்துவ நாடுகள் தற்காலிகமாக நவீன தாராளமய கொள்கை களை மூட்டை கட்டி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா இன்னும் இந்த கொள்கைகளை தற்காலிகமாகக்கூட கைவிட தயாராக இல்லை என்றே தெரிகிறது. மிக விரைவில் கூடுதலான நிவாரண திட்டங்களை இந்தியா அறிவிக்கவில்லை எனில் உழைப்பாளிகள் வாழ்க்கை இன்னும் மோசமாக மாறும் அபாயம் உருவாகும். கோவிட் 19 வைரசுக்கு எதிராக பொருளாதார பாதுகாப்பு இல்லை எனில் மருத்துவ பாது காப்பும் கேள்வி குறியாகிவிடும். இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி! 3
அ.அன்வர் உசேன்