tamilnadu

ஓட்டுநர் உரிமங்கள் டிசம்பர் 31-வரை செல்லும்

புதுதில்லி, ஆக.24- நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் ஆவணங்களும் டிசம்பர்- 31-ஆம் தேதி வரை செல்லுபடி யாகும் என்று மத்திய அரசு அறி வித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை  அமைச்சகம் திங்களன்று வெளி யிட்டுள்ள செய்தியில்:- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்ச கம் நாடு முழுவதும் வாகன உறுதிச்  சான்றிதழ்கள், உரிமைச் சான்றிதழ்கள், அனுமதிச்சான்றி தழ்கள், பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான அனைத்து வகையான ஆவணங் களின் செல்லுபடித் தேதியை டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளது.